பேயாழ்வார் பிறந்த இடம் திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் என் ஆழி வண்ணன் பால் இன்று - பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி என் மகன் ஐந்தாவது படிக்கும் போது அவனுக்கு ஆழ்வார் கதைகளைச் சொல்லி வைத்தேன். ஒரு நாள் அவன் புத்தகப் பையைப் பார்த்த போது அதில் ஏகப்பட்ட காகிதங்களில் ’ஆழ்வார் கதைகள்’ என்ற தலைப்பில் முதலாழ்வார்கள் கதை காமிஸ்க் வடிவில் வரைந்திருந்தது கண்ணில் பட்டது. ( ஒரு பக்கத்தைத் தந்துள்ளேன்). சமீபத்தில் தோளுக்கு மேல் வளர்ந்து கல்லூரி செல்லும் வயதில் அவனுடன் ஒரு விடியற்காலை சென்னையைச் சுற்றி நடந்த போது, முன்பு அவன் வரைந்த காமிக்ஸ் வரைபடத்தைப் பற்றி பேச்சு வந்தது. என் கைப்பேசியில் அவன் வரைந்த அப்படத்தைக் காண்பித்தேன். அதைப் பார்த்துவிட்டு அவன் கேட்ட கேள்வி “பேயாழ்வார் மைலாப்பூரில் தான் பிறந்தாரா?. பிறந்த இடம் இன்னும் இருக்கிறதா?’ ‘இருக்கிறது’ என்று சுருக்கமாகப் பதில் சொன்னேன். ‘இப்போது போய் பார்க்கலாமா?’ உடனே ஓர் ஆட்டோவை பிடித்து மைலாப்பூர் சென்றோம். பேயாழ்வார் திருமஞ்சனக் கட்டியத்தின் போத...