Skip to main content

Posts

ராமாயணம் (Vol 1)- துஷ்யந்த் ஸ்ரீதர் ( தமிழில் சுஜாதா தேசிகன்)

ராமாயணம் (Vol 1)- துஷ்யந்த் ஸ்ரீதர்  ( தமிழில் சுஜாதா தேசிகன்)  ஸ்ரீமத் ராமாயணம் ஓர் இதிகாசம். இதிகாசம் என்றால் ‘அப்படித்தான் இருந்தது’ என்று பொருள். அதனால் ராமர் இருந்தார் என்று நம்பப்படுகிறது இல்லை. ராமர் இருந்தார்.  ஸ்ரீமத் ராமாயணத்தை ஆழ்வார்களும், ஆசாரியார்கள் கொண்டாடியிருக்கிறார்கள். ‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்ற நம்மாழ்வாரின் வாக்குக்கு ஏற்றார் போல், ஸ்ரீமத் ராமாயணத்தைக் கற்றுக்கொள்ள ஸ்ரீராமானுஜர் திருமலைக்குச் சென்றார். குலசேகர ஆழ்வார் மொத்த ராமாயணத்தையும் ’இன்தமிழில்’ சுருக்கமாக அருள, ஸ்வாமி தேசிகன் ரகுவீர கத்யம் என்ற அற்புதமான ஒன்றை நமக்குச் சமஸ்கிருதத்தில் அருளினார். கம்ப ராமாயணம் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயம். வடக்கே துளசிதாசர் என்ற மஹான் ’ராமசரிதமானஸ்’ (ராமரின் செயல்களால் தொகுத்து எழுதப்பட்ட ஏரி என்று பொருள்) என்று ஸ்ரீராமரின் செயல்களைத் தொகுத்து வழங்கினார். இப்படி ராமாயணத்தைப் பல விதமாக, பல மொழிகளில் நமக்குப் பலர் தந்துள்ளார்கள். எந்த மொழியில் எப்படி இருந்தாலும் அதில் ஸ்ரீராமர் குடிகொண்டிருக்கிறார்.  ஸ்ரீமத் ராமாயணத்துக்கு இன்னொரு...

ஆபாச சகிப்புத்தன்மை

ஆபாச சகிப்புத்தன்மை  முன்பு எப்போதோ படித்த நகைச்சுவை இது.  ஒருவர் கருப்பாக ஏதோ குடித்துக்கொண்டு இருக்க, பையன் ஓடி வந்து, "அப்பா, வீட்டுத் தண்ணீரில் சாக்கடை கலந்துவிட்டது குடிக்காதே! வயிற்றுக்கு ஏதாவது ஆகிவிடப் போகிறது!" என்று பதற, அப்பா கூலாக, “அப்படியா எனக்கு ஒன்றும் தெரியவில்லையே! நல்லா தானே இருக்கு!” என்பார். பையன் முழிக்க, அப்பா, “உங்க அம்மா போட்ட காபி என்று நினைத்தேன்” என்பார்.  இந்த அப்பாவைப் போலத் தான் இன்று தமிழ்நாட்டு மக்களும் இருக்கிறார்கள். நம் மீது சாக்கடையை வாரி அடித்தாலும் அதைத் துடைத்துக்கொள்ளக் கூட தயங்குகிறோம். சமீபத்தில் தமிழக ‘உயர்’ கல்வித்துரை அமைச்சர் சைவம், வைணவம் குறியீடுகளைப் பாலியல் தொழில் செய்பவர்களுடன் சம்பந்தம் படுத்திப் பேசியுள்ளார்கள். பெரியார் மண், திராவிட மாடல் ஆட்சி என்று கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் புண்ணிய பூமியில் பயிருக்குப் பதில் களைகள்‌ பூத்துக்குலுங்குகிறது. அமைச்சர் பேசியதற்குப் பெண்கள் குறித்து அமைச்சர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது போன்ற பொத்தாம் பொதுவான கண்டனங்களைச் சொல்லி கடந்துச்செல்கிறார்கள். சைவம், வைணவம் குறித்து இப்படிப் பேச...

ஸ்ரீராமர் - என் நண்பேன்டா !

ஸ்ரீராமர் - என் நண்பேன்டா ! உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தக் குறளை எடுத்துக்காட்டாக நாம் பல காலமாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.  இப்படியொரு நண்பனைப் பார்ப்பதோ அல்லது இப்படியொரு நண்பனாகவோ இருப்பது அரிது. காரணம் சுயநலம்.    ’தோழன்’ என்ற சொல் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டும் தான் வருகிறது.  திருமங்கை ஆழ்வார் பாசுரம். பாசுரம் உங்களுக்குத் தெரிந்தது தான்.   ஏழை, ஏதலன் கீழ்மகன் என்னாது   இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து  மாழை மான் மட நோக்கி உன் தோழி   உம்பி எம்பி என்று ஒழிந்திலை  உகந்து  தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற    சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட  ஆழி வண்ண! நின் அடியிணை அடைந்தேன்    அணி பொழில் திருவரங்கத்து அம்மானே! குகன் தான் அறிவில்லாதவன், கொலைத்தொழில் புரிகின்றவன், நீச ஜாதியில் பிறந்தவன் என்று தன் தாழ்வுகளைச் சொல்ல நினைப்பதற்கு முன்பே, அவற்றை எல்லாம் என்னாது இரங்கி ஸ்ரீராமர்  ‘உகந்து தோழன் நீ எனக்...

பிச்சை - S, M, L, XL

பிச்சை - S, M, L, XL  ஸ்மால்  பொதுவாக நாம் காரில் செல்லும் போது, ஜன்னலுக்கு வெளியே பிச்சை கேட்பவர்கள் கையை உள்ளே நீட்ட அனுமதிப்பதில்லை. கண்ணாடியைக் கண் சிமிட்டுவது போல இறக்கி இரங்கிப் பிச்சைப் போடுவோம். காசுக்காக அவர்கள் நம் காரை துடைப்பதைக் கூட அருவருப்பு காரணமாக நிராகரிக்கிறோம். .  அதே போல் கோயிலில் பல பிச்சைக் காரர்கள் இருக்கும் போது ஒருவருக்குப் போட்டால் மொத்தக் கூட்டமும் நம்மை சூழ்ந்துகொண்டு பிச்சைக் கேட்பார்கள். அதைப் பல முறை நாம் தவிர்க்கவே விரும்புவோம்.  மீடியம்  சமீபத்திய  ஒரு YTபர் வீடியோ பண்டிகை பரிசாகத் துணிமணிகளை இலவசமாகக் கொடுக்க கூட்டம் எனக்கு உனக்கு என்று கையை வாகனத்துக்குள் நீட்டி வாங்குகிறார்கள். பொறுமையாக வாங்குங்கள், கையை உள்ளே நீட்டாதீர்கள் என்று அவர் சொல்ல இலவசத்தை எப்படியாவது வாங்கியே தீரவேண்டும் என்ற முனைப்பில் கூட்டம் முண்டியடிக்க என்ன செய்வது என்று தெரியாமல் 'அசிங்கமா பண்ணாதீங்க' ' கைய நீட்டாதீங்க’ என அவர் தன் வண்டியை வேகமாக ஓட்டிச் செல்கிறார்.   லார்ஜ் இலவச நோட்டீஸ் கொடுத்தாலே கையை நீட்டும் தமிழக மக்கள், ஒவ்வொரு தேர்தல் ...

சில விஷயங்கள்

சில விஷயங்கள்  ராஜாஜி நான் பிறப்பதற்கு முன் எழுதிய தலையங்கங்களை அவ்வப்பொது படிப்பது உண்டு. அப்படிப் படிக்கும்(உண்மைகள் உறங்குவதில்லை) போது அந்தப் புத்தகத்தின் முன்னுரையை (வானதி ராமநாதன்) மீண்டும் ஒருமுறை படித்தேன்.  ”என்னுடைய சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து என்ற இரண்டு நூல்களையும் 'இராமாயணம்', 'மகாபாரதம்' என்ற பெயரில் வானதி பதிப்பகத்தார் என்னுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வெளியிடுகிறார்கள்.' - சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி' என்று 26-8-72 தேதியிட்டு ஓர் அறிவிப்பைக் 'கல்கி' வார இதழ் வெளியிட்டது. அப்போது என் தந்தையாருக்கு ராஜாஜி அவர்கள் ஆசீர்வாதம் செய்து இரண்டு பழங்களையும் எடுத்துத் தந்தார். "நான் கவர்னர் ஜெனரலா இருந்தது வெறும் ரெகார்டுலதான் இருக்கும். ஆனா இந்த மகாபாரதமும் இராமாயணமும் எழுதினேன் பாரு, அது இரண்டுமே இரண்டு கனிகள். கற்பகக் கனிகள். அதை இல்லை என்று சொல்லாமல் எப்பவும் மக்களுக்குக் கிடைக்கும்படியா மலிவான விலையிலே புத்தகமாப் போட்டுத் தந்து கொண்டே இருக்கணும். அதை நீ கட்டாயம் செய்வாய். அதற்கு அச்சாரம்தான் இந்தக் கனி" என்று அப்போது தி...

மழையில் அனுமான் சாலீசா

 மழையில் அனுமான் சாலீசா  சிறுவயதில் காலெண்டர் பின்புறம் வெள்ளையாக இருந்தால் உடனே அதில் ஏதாவது வரைய ஆரம்பித்துவிடுவேன். ஏதோ ஒரு மாசக் கடைசியில் காலெண்டர் ஷீட் கிடைக்க அதில் ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் அனுமார் படம் வரைய ஆரம்பித்தேன். ஏ.பி.டி அனுமாரின் விஷேசம் பச்சை கலர். பச்சை தசைகள், பச்சை விரல்கள், பச்சை வால்… ஏன் அனுமாருக்கு உடம்பு முழுவதும் இருக்கும் ரோமங்கள் கூட பச்சைதான். இடுப்பில் இருக்கும் சிறிய பட்டுத் துண்டு மட்டுமே பிங்க் கலர். அந்தப் பச்சை என்னை ஈர்த்தது!  அவர் சஞ்சீவி மலையைத் தூக்குவதைவிட உடம்பு முழுவதும் பச்சையாக வரைவது எனக்கு ஒரு சவாலாக இருந்தது. வரைந்தேன்.  “அனுமார் மாதிரி இருக்கு பெருமாள் சந்நிதியில் வெச்சுடு,” என்று பாட்டி அங்கீகரித்தாள் அனுமார் படத்துக்கு பார்டர் எல்லாம் போட்டுக் கெட்டி அட்டையில் ஒட்டி அதை பெருமாள் சந்நிதியில் மாட்டினேன். பாட்டி ஏதோ வேண்டிக்கொண்டு காலெண்டர் அனுமாருக்கு வடையை மாலை கோத்துச் சாத்தினாள். வடையை நாங்கள் சாப்பிட்டோம். அதில் இருந்த எண்ணெய்யை அனுமார் சாப்பிட்டார். வடையில் இருந்த எண்ணெய் படத்தில் இறங்கியது. ஒரு சமயம் கல்லுக்குழி ஆ...

மெட்ராஸ் விஜயம்

மெட்ராஸ் விஜயம்  இரண்டு நாள் சென்னை விஜயம். எல்லா இடங்களிலும் 40₹ குறைந்து காபி இல்லை. கீதம் ஹோட்டலில் 38ரூ ( மினி காபி). காபி நன்றாக இருக்கிறது. கொடுத்தவுடன் சூடாக்க கைக்கு அடக்கமாக ஓர் அடுப்பு எடுத்துக்கொண்டு செல்வது உத்தமம். ஊர் முழுக்க காபி மாமா, மெட்ராஸ் காபி கடைகள் முளைத்திருக்கிறது. அதே போல் ஊர் முழுக்க ‘சாய்’ கடைகள்.  பல நாள் ஆசையான ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில் சூரியன் வருவதற்கு முன் நடைப்பயிற்சிக்குச் சென்றேன். கீழே பார்த்த போது மூடி இருந்த திருப்பதி தேவஸ்தானம் தாயார் சன்னதியும் அருகில் திறந்திருந்த  'Tea Nagar Coffee' கடையும் கண்ணில் பட்டது. நடேசன் பூங்காவில் வாழைப்பழம் வாங்கிக்கொண்டு இருந்த எழுத்தாளர் இரா. முருகனை பார்த்து ஒரு ஹலோ சொன்னேன். குத்து மதிப்பாக என்னை அடையாளம் கண்டுகொண்டார். ராமேஸ்வரம் சாலையில் வண்டி ஓட்டிக்கொண்டு செல்பவர்களைப் பார்க்கும் போது சர்க்கஸ் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கிறது. ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு நாள் முதல்வர் இந்தச் சாலையில் பயணிக்க வேண்டும். ரங்கன் தெரு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஒரு குப்பை தொட்டிக்கு பதில் இரண்டு வந்திருக்...

நாராயணீயம் புத்தக வெளியீட்டு விழா குறிப்பு

 நாராயணீயம் புத்தக வெளியீட்டு விழா குறிப்பு  இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அன்று தான் குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம். குலசேகர ஆழ்வார் சேரநாட்டில் ( இன்றைய கேரள தேசம் ) கொல்லிநகர் ( திருவஞ்சிக்களம் ) என்னும் ஊரில் மாசி மாதம் புனர்பூசம்  நட்சத்திரத்தில் அவதரித்தார். இது உங்களுக்குத் தெரிந்த தகவல் தான்.  தாய்மொழியான மலையாளம், தமிழ், வடமொழி என்று மும்மொழிக் கொள்கையை அன்றே கடைப்பிடித்தவர் இந்த ஆழ்வார்.  அதே கேரளத் தேசத்தைச் சேர்ந்த நாராயண பட்டத்திரி அவர்கள் அருளியது தான் நாராயணீயம். சுமார் 18,000 ஸ்லோகங்கள் கொண்ட பாகவதத்தின் சாரமாக,  சுமார் 1000 உயர்ந்த வடமொழி ஸ்லோகங்களாகத் தந்துள்ளார்.  அதை நண்பர் ஸ்ரீநிவாசன் அவர்கள் தமிழ்ப் பாடல் வடிவில் வடித்திருக்கிறார். ஞாயிறு மாலை இந்தியா கெலித்து விடுமா என்ற கெலியிலும் பலர் நாரத கான சபாவில் அதன் புத்தக வெளியீட்டுக்கு வந்திருந்தார்கள்.   வீடியோ காமராவில் பின்னந்தலை தெரியாமல் குனிந்துகொண்டு சென்ற போது, அடியேனை ஸ்ரீநிவாசன் வரவேற்று முன் வரிசையில் அமர வைத்...

விகடன் கேலிச்சித்திரம் - கொந்தளிக்கத் தேவை இல்லை.

விகடன் கேலிச்சித்திரம் - கொந்தளிக்கத் தேவை இல்லை.  விகடன் கார்டூனுக்கு கொந்தளிக்கத் தேவை இல்லை. ஆபாசமாக பல அட்டைப்படங்கள் போட்ட போது  ( பிறகு குட்டியாக மன்னிப்பு கேட்டார்கள்)  கொந்தளிக்காதவர்கள் இதற்கு ஏன் கொந்தளித்தார்கள் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இருந்தாலும் ஏன் கொந்தளித்தார்கள் என்று யோசிக்கிறேன்.  முதன் முதலில் வெளிநாட்டுக்குச் செல்பவர்கள் கலாச்சார அதிர்ச்சியை (cultural shock ) அனுபவிப்பார்கள். எனக்கும் அந்த உணர்ச்சி ரீதியான அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதைக் காட்டிலும் வேறு பல அதிர்ச்சிகளும் ஏற்பட்டிருக்கிறது. நான் பல வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். தில்லும் முல்லு படத்தில் தே.சீனிவாசன் ஒரு நேர்முகத் தேர்வுக்கு வரும் இளைஞன் சட்டையில் பூனை படம் இருக்க, “இது என்ன?” என்று கேட்பார். “பூனை” என்று பதில் சொல்ல,  ”அதில் என்ன பெருமை? ” என்பார்.  அது போலத் தான் என் வெளிநாட்டுப் பயணங்களும். அதில் எந்தப் பெருமையும் இல்லை, ஆனால் பல அனுபவங்களைச் சந்தித்திருக்கிறேன்.   ஒரு முறை ஃபிரான்ஸ் செல்லும் போது ஃபிளைட்டில் எவ்வளவு கேட்டும் கடைசி வரை...

கழுதை வழி

கழுதை வழி பத்து நாளைக்கு முன் ‘இந்தியர்கள் விலங்கிட்டு’ இந்திய நாட்டுக்குத் திருப்பி அனுப்பியதைக் கண்டு பலரும் ராகுல் காந்தி போலக் கொத்துப் போனார்கள். சட்டவிரோதமாகச் சென்றதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தப்பு தான், ஆனால் அவர்களை நடத்தியவிதம்? தோழர்கள் மனிதம் செத்துவிட்டது என்றார்கள்.  இந்தியாவிற்குத் திரும்பி அனுப்பினார்கள் என்று எழுதினார்கள். யாரும் தாய்நாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் என்று எழுதவில்லை. டிரம்ப் இவர்களைக் குற்றவாளிகள், வேற்றுக்கிரகவாசிகள் என்று மீண்டும் மீண்டும் திட்டிக்கொண்டு இருந்த போது அதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனாலேயே பலர் டிரம்ப் வரக் கூடாது என்று வேண்டிக்கொண்டார்கள்.  பிரதமர் மோடியின் ஸ்வச்ச பாரத் - தூய்மை இந்தியா திட்டத்துக்கு நாமும் ஏதாவது செய்வோம் என்று முன்பு நான் வசித்த தாம்பரம் வீட்டுக்கு முன் இருந்த குப்பை எல்லாம் அகற்றி இங்கே குப்பை போடாதீர்கள் என்று போர்ட் வைத்து சின்ன செடி ( நாளை மரமாக வளரும் என்று நம்பி ) வைத்தேன். சில நாளில் திடீர் என்று மரம் உசந்து வளர்ந்துவிட்டதோ என்று பார்த்தால் நான் வைத்த செடிக்குப் பக்கம் ஒரு பாஜக ...